tamilnadu

img

கார்ப்பரேட்டுகளின் கைகளில் பொருளாதாரம் நாட்டின் நலனுக்கு நல்லதல்ல!

புதுதில்லி, ஜூலை 13- நாட்டின் பொருளாதாரம் ஒரு சில கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்ப டைக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் வியாழனன்று நடை பெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எளமறம் கரீம் பேசியதாவது: இந்த பட்ஜெட், கேரள மாநிலத்திற்கு பாகுபாடு காட்டியிருக்கிறது என்றும், கேரளாவின் கோரிக்கைகளை முற்றி லுமாக உதாசீனம் செய்திருக்கிறது என்றும் கூறுவதுடன் என் உரையைத் தொடங்குகிறேன். குறிப்பாக, சென்ற ஆண்டு கடும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள மாநிலத்திற்கு அதன் பேரழி விலிருந்து மீள்வதற்குத் தேவையான நிதி உதவியினைச் செய்திட மத்திய அரசு முன்வரவில்லை. 

நானும் உதவ மாட்டேன் பிறரிடமிருந்து வாங்கவும் கூடாது
மேலும், கேரள அரசாங்கம் தன்னுடைய கடன் வாங்கும் அளவை உயர்த்திக் கொள்வதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தைக் கோரியிருந்தது. அதற்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வில்லை. எவ்விதமான உதவியையும் நாட்டிற்கு வெளியேயிருந்து கேரள மாநில அரசு பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசால் அனுமதிக்கப்படவில்லை. அவ் வாறு வாங்குவது நாட்டிற்கு அவமானம் என்று கூறும் மத்திய அரசு, தானாகவும் எவ்வித நிதி உதவியையும் செய்திட முன்வரவில்லை. இதுதான் இப்போதைய மத்திய அரசின் மனோபாவமாக இருக்கி றது. இது மிகவும் வருந்தத்தக்கது. பட்ஜெட் உரையைப் பொறுத்தவரை யில், அது முழுக்க முழுக்க பெரும் கார்ப்ப ரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் எண்ணிலடங்கா வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளை யும் அள்ளித்தருவதாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் சர்வதேச நிதிச் சந்தையின் பிடி இறுகக்கூடிய விதத்திலேயே இது அமைந்திருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எதுவும் இல்லை. மாறாக, பட்ஜெட் வருவாய் வீழ்ச்சியை சாமானிய மக்களின் தோள்க ளில் சுமக்கச்செய்திடும் விதத்திலேயே பட்ஜெட் அமைந்திருக்கிறது.

பொருள் மாறிய சீர்திருத்தம்
பட்ஜெட்டில் ‘சீர்திருத்தம்’ என்பதன் பொருள் மாறியிருக்கிறது. முன்பெல் லாம், நிலச் சீர்திருத்தங்கள் என்றால் நிலப்பிரபுக்களிடமிருந்து நிலத்தை எடுத்து விவசாயிகளுக்கும், நிலமற்ற வர்களுக்கும் கொடுப்பது என்று இருந்தது. ஆனால், இப்போது, ஏழைகளி டம் கொஞ்சநஞ்சமிருக்கிற செல்வத்தை யும் பிடுங்கி, பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் கொடுப்பது என்று மாறியிருக்கிறது. நிதியமைச்சர் தன் பட்ஜெட் உரை யில் ஏராளமாகப் பேசியிருந்தபோதிலும், பட்ஜெட்டின் உண்மையான வருவாய் மற்றும் செலவினங்கள் கூறப்பட வில்லை. நாட்டின் பொருளாதார மந்தம், விவ சாய நெருக்கடி, தொழில்துறை ஸ்தம்பித்த நிலைமையிருப்பது, வேலையின்மை என நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமை யாகப் பாதித்துள்ள எதைப்பற்றியும் பட்ஜெட் உரையில் இல்லை.

மிகைப்படுத்தலும் அதீத மதிப்பீடும்
மாறாக அரசாங்கம் பொருளாதார நிலைமை மிகவும் வலுவாக இருப்ப தாக மிகைப்படுத்திக் கூறியிருக்கிறது. இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சி விகிதம் அதீதமாக மதிப்பிடப்பட்டிருப்ப தாக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்துக் கூறியிருக்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் முறை மாற்றியமைக்கப் பட்டிருப்பதே இவ்வாறு அதீத மதிப்பீட் டிற்கான காரணம் என்றும் அவர் கூறியி ருக்கிறார். அரசுத்தரப்பில் கூறப்படுவது போல வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் கிடை யாது என்றும், அது உண்மையில் 4.5 சதவீதம்தான் என்றும் கூறுகிறார். நம்முடைய பொருளாதார ஆய்வ றிக்கையானது நம் தொழில்கள் செயல்பாடுகள் சரியான நிலையில் இல்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கி றது. தொழில் உற்பத்தி அட்டவணை சென்ற ஆண்டு இதே காலாண்டிற்கு 7.5 சதவீதமாக இருந்தது, இப்போது இந்த ஆண்டில் அது வெறும் 0.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி க்கு ஆட்டோமோபைல் தொழிலையும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். நம் நாட்டில் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கார்களின் விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது. 2024இல் 5 டிரில்லியன் டாலர் பொரு ளாதாரத்தை எட்டுவோம் என்று பீற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அமெரிக்க டால ருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 7.8 சதவீதமும், யென்னுக்கு எதிரக 7.7 சதவீத மும் சரிந்திருக்கிறது.

எதார்த்த நிலை என்ன?
2018-19இல் அந்நிய நேரடி முதலீடு 14.2 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அர சாங்கம் கூறுகிறது. ஆனால் எதார்த்த நிலை என்ன?  இதில் மிகப்பெரிய அளவு ஊகச் சந்தைக்குப் போய்விடுகிறது. தொழில் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு மேற் கொள்ளப்பட வில்லை. பின் எப்படி வேலைவாய்ப்பு பெருகும்? வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமாக இருக்கிறது. கிராமப் புறங்களில் அது 5.3 சதவீதமாகவும், நகர்ப் புறங்களில் 7.8 சதவீதமாகவும், சராசரியாக 6.1 சதவீதமாக இருக்கிறது. விவசாயத்துறை யில் உண்மையான வளர்ச்சி கிடையாது. உணவு தானியங்கள் உற்பத்தியிலும் கணி சமான அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உண்மையான நிலைமைகள் இவ்வாறி ருக்கும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மட்டும் எப்படி 7 சதவீத மாக இருந்திடும்? இதைப்பற்றியெல்லாம் பட்ஜெட் எதுவும் கூறவில்லை.

எண்ணெய் விலை: அபத்த அறிக்கை
எண்ணெய் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சர் கூறுகிறார். இப்படி ஓர் அபத்த மான அறிக்கையை அரசாங்கத்தால் எப்படிக் கொடுக்க முடிகிறது? மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், குறிப்பாக அமெரிக்காவுக்கும் ஈரானு க்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் விலை எப்படிக் குறையும் என்று இந்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது?

மணிக்கு ரூ.80 கோடி கடன்
மத்திய அரசு வருவாய்க்கும் செல வினங்களுக்கும் இடையேயான இடை வெளியை நிரப்புவதற்காக, நாளொன்று க்கு 1,928 கோடி ரூபாய் கடன் வாங்க இருக்கிறது. அதாவது மணிக்கு 80 கோடி ரூபாய். எனவே, பட்ஜெட்டின் மிகப்பெரிய இனமே வாங்கும் கடனுக்கு வட்டி செலுத்துவதுதான். இது நாளொன்றுக்கு 1,809 கோடி ரூபாயாக இருந்திடும். இந்த லட்சணத்தில் நாடு இருக்குமானால் பொருளாதார வளர்ச்சி எப்படி ஏற்படும்? எனவேதான் நிதியமைச்சர் உண்மை யான வருவாய் மற்றும் செலவினங்க ளை இந்த பட்ஜெட்டில் கூறவில்லை. மாறாக, பிப்ரவரி 1 அன்று அளித்திட்ட இடைக் கால பட்ஜெட்டில் இருந்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளை அளித்திருக்கிறார். 42 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்திட அரசு முடிவு செய்திருக்கிறது. 2014-15 தேர்தலின் போது ஆட்சியாளர்கள் “நல்ல காலம் பிறக்கும்” என்ற முழக்கத்தை முன் வைத்தார்கள். ஆனால் இப்போது “நல்ல காலம்” எவருக்கும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்,” “டிஜிட்டல் இந்தியா,” “ஸ்டார்ட்அப் இந்தியா,” “ஸ்டாண்ட்அப் இந்தியா” என எண்ணற்ற முழக்கங்களை அவிழ்த்து விட்டது. இப்போது இவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. அனைத்து சுமைகளையும் சாமானிய மக்கள் மீது ஏற்றி வைத்துள்ளனர்.

சாமானிய மக்கள் மீது அதீத சுமை
அரசாங்கம் ரயில்வேயை தனியாரி டம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏர் இந்தியாவையும் விற்பதற்குத் திட்டமிட்டிருக்கிறது. சேலம் ஸ்டீல் உட்பட ‘செயில்’(SAIL) எனப் படும் இந்திய ஸ்டீல் கம்பெனியையும் விற்றிட முடிவு செய்திருக்கிறது. இதுதான் இந்த அரசின் நிலைப்பாடாகும். தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் என மூன்று தவணை களில் தொகை அளிக்கப்படும் என்று அரசாங்கத்தால் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இல்லை. இதேபோன்றுதான் எல்லாமே. சாமானிய மக்கள்மீது அதீத சுமையை ஏற்றும் வண்ணமே இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.  நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மும் ஒருசில கார்ப்பரேட்டுகளின் கை களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் பொருளாதாரம் சர்வதேச நிதி கார்ப்பரேட்டுகளுடன் ஒருங்கிணைக் கப்பட்டிருக்கிறது. எனவே நம் நாடு நாசமடையக்கூடிய விதத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல. எனவே, இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம். இவ்வாறு எளமரம் கரீம் பேசினார். (ந.நி.)