tamilnadu

img

‘இந்தியாவுக்கு வராதே.. ஓடிப் போ கொரோனா..’ பஜனைப் பாட்டு பாடி வேண்டுதல்

புதுதில்லி:
சீனாவில் அறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின்60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப்பரவி, பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புக்கு என குறிப்பிட்ட மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மட் டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆனால், பசுவின் சிறுநீர் மற்றும் அதன் சாணம் மூலம் கொரோனாவைக் குணப்படுத்த முடியும் என்று ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும், இந்து மகா சபையினரும் காமெடி செய்து வருகின்றனர். கோடைக் காலத்தில் கொரோனா பரவாது; மது அருந்துவோரை கொரோனா நெருங்காது என்ற கதைகளையும் சிலர் பரப்பிக் கொண்டிருக் கின்றனர்.இந்நிலையில்தான், “ஓடிப் போ கொரோனா, இந்தியாவில் உனக்கு என வேலை, ஓடிப் போ கொரோனா” என்று கொரோனாவிடம் கெஞ்சிப் பாட்டுப் பாடும் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 4 நிமிட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பெண்கள் ஒன்றாக கூடி,‘கெரோனாவே வெளியேறு’ என்று பஜனைப் பாட்டு பாடிவேண்டுதல் செய்கின்றனர். இந்தவீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

;