tamilnadu

img

கொரோனா பரவலுக்கு சமுதாய முத்திரை குத்தாதீர்கள்: மத்திய அரசு

புதுதில்லி, ஏப்.9- கொரோனா வைரஸ் பரவலுக்கு எந்த சமுதாயம் மீதோ, பகுதி மீதோ முத்திரை குத்தாதீர்கள் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்ச கத்தின் இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் பரவலுக்கு கார ணம் என எந்த சமுதாயம் மீதோ, பகுதி மீதோ முத்திரை குத்தாதீர்கள். சமூக வலைத் தளங்களில் இதுபோன்ற தவறான கண் ணோட்டம் பரப்பப்படுகிறது.

தொற்றுநோய் பரவலின்போது, இத்த கைய அச்சமும் கவலையும் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மீது வெறுப்புணர்வை உண் டாக்கி விடும். இறுதியாக, தேவையற்ற சமூக பதற்றத்துக்கு வழிவகுத்து விடும். எனவே, பாரபட்ச அணுகுமுறைகளை தடுப்பது இப்போது அவசர தேவையாகும். சுகாதார விழிப்புணர்வு பெற்ற ஒரே சமுதாயமாக நாம் நிமிர்ந்து நிற்போம். கொரோனா சிகிச்சை பணியில் ஈடு பட்டுள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், காவல்துறை யினர் ஆகியோர் மூலம் கொரோனா பர வும் என்ற அச்சத்தில் அவர்கள் மீது தாக்கு தல் நடத்தப்படுவதாக தகவல்கள் வந் துள்ளன. அவர்கள் எல்லாம் உங்களுக்கு உத வவே பணியாற்றி வருகிறார்கள். எனவே, சுகாதாரப் பணியாளர்கள் மீதோ, துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறையினர் மீதோ தாக்குதல் நடத்தாதீர்கள்.