புதுதில்லி:
திங்களன்று ஜூன் 17 நாடு முழுவதும் அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்கத்தாவில் அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஜூன் 17ஆம் தேதி நாடு முழுவதும் அரசுமற்றும் தனியார் என அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
அத்தியாவசிய சேவைப்பணியில் இல்லாத மருத்துவர்கள் அன்று நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.அதேபோல் எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க ஜூன் 15, 16-ம் தேதிகளில் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா,அமைதிப் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். போராட்டம் நடைபெறும் தேதிகளில் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்து இயங்கும். இந்தப் போராட்டங்கள் திங்கள்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.