tamilnadu

img

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்காதே...

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து டிஆர்இயு சார்பில் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 118வது பிறந்தநாளான அக்.13  அன்று சென்னை எம்எம்சி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் அ.ஜானகிராமன் தலைமை தாங்கினார். மக்கள் முதன்மை இயக்க அமைப்பாளர் தாமஸ் பிராங்கோ, ஜான் வின்சென்ட் (ஏஐஎஸ்எம்ஏ), பாலச்சந்தர் (ஏஐஎல்ஆர்எஸ்ஏ), ரமேஷ் (ஐஆர்டிஎஸ்ஏ) ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். டிஆர்இயு துணைப் பொதுச் செயலாளர் பேபி ஷகிலா  நன்றி கூறினார்.