இந்த மாத இறுதியில் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஊரடங்கு தளர்வு - 4.0 வழிகாட்டுதல்களை வெளியிடும் போது மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) அனுமதிக்கும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி இன்று தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் திறக்க பல மாநிலங்களில் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில் , ஒரு பயணி ரயிலுக்குள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவிட மாட்டார் என்பதால் மெட்ரோ சேவைகளையும் மீண்டும் தொடங்க முடியும் என்று அரசாங்கத்தில் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கடுமையான சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றி பொதுப் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.