tamilnadu

img

கிரிக்கெட் சூதாட்ட தரகர் இந்தியா கொண்டுவரப்பட்டார்

புதுதில்லி:
 கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப் பட்ட சூதாட்டதரகர் சஞ்சீவ் சாவ்லா, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டார். கடந்த 2000 ஆம் ஆண்டில் எழுந்த கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட  சஞ்சீவ் சாவ்லா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தும்படி, பிரிட்டன் அரசுக்கு 2016 ஆம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதுதொடர்பான வழக்கை கடந்த மாதம் 23 ஆம் தேதி பிரிட்டன் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, சாவ்லாவை 28 நாள்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், பிரிட்டனால் அவர் நாடு கடத்தப்பட்டார்.  சஞ்சீவ் சாவ்லாவை வியாழனன்று லண்டனில் இருந்து தில்லிக்கு பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர்  அழைத்து வந்தனர்.

;