tamilnadu

img

கொரோனா கால நிவாரணம் கோரி நாடு முழுவதும் சிபிஎம் போராட்டம்

அகில இந்திய எதிர்ப்பு நாள் 

புதுதில்லி, ஜூன் 16-   கொரோனா கால நிவாரணமாக 7500 ரூபாய் பணம்,  பத்து கிலோ உணவு தானியங்களை மக்களு க்கு வழங்க வேண்டும். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். பொதுத்துறைகளைத் தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித் தும் தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும்  ஜூன் 16 செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலுக் கிணங்க நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவல கத்தின் முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அர சியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன்சென், ஹன்னன் முல்லா மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள், முன்னணி ஊழியர்கள் கலந்துகொண்டு முழக்க மிட்டனர்.

கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு  

சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின்   மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.  மாநிலக்குழு உறுப்பினர் மூசா, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து, நகர்க்குழு உறுப்பினர் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இதில் மாநில, மாவட்ட தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.

கூட்டத்தில் வருமான வரி செலுத்தாத குடும் பத்தினர் அனைவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும்,   அடுத்த ஆறு மாதங் களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்க வேண்டும்.   மகாத்மா  காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் 200 நாட்களுக்கு வேலை அளிக்க வேண்டும். ஊதியத்தொகையையும் உயர்த்திட வேண்டும், நகர்ப்புற ஏழைகளுக்கும் இதனை விரிவாக்கிட வேண்டும். வேலையில்லாதோருக்கு வேலையில்லா நிவாரணம் உடனடியாக அறி வித்திட வேண்டும்.   நாட்டின் சொத்துக்களை சூறை யாடுவதை நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை யும், தொழிலாளர் நலச்சட்டங்களைத் தொழி லாளர் விரோதச் சட்டங்களாக மாற்றுவதையும் நிறுத்திட வேண்டும் எனக் கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மோடி அரசின் மனிதாபிமானமற்ற செயல் 

கோரிக்கைகளை விளக்கி சீத்தாராம் யெச்சூரி  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் வேலையிழந்தும், வாழ்வாதாரங்களை இழந்தும் பட்டினிக்கொடுமைக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில் மோடி அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் வரியை உயர்த்தியிருப்பதும், தன் வருமானத்தை அதிகரித்துக்கொண்டிருப்பது, மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கிடும். இது  மனிதாபிமானமற்ற செயலாகும். பெட்ரோலியப் பொருட்களின் வரிவிதிப்பை மோடி அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும். உணவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு யெச்சூரி கூறினார். (ந.நி.)