tamilnadu

img

இந்தியாவில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை நெருங்கியது...

புதுதில்லி
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 24,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 779 பேர் உயிரிழந்துள்ளனர். 5,210 பேர் குணமடைந்துள்ள நிலையில், அதிகபட்சமாக நாட்டின் நிதிநிலை தலைநகரை கொண்டுள்ள மகாராஷ்டிராவில் 6,817 பேர் பாதிக்கப்பட்டள்ளனர். குஜராத்தில் 2,815 பேரும்,  தலைநகர் பிரதேசமான தில்லியில் 2,514 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் 1,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உத்தரப்பிரதேசத்தில் 1,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் 1,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான கட்டத்தை  தெலுங்கானா நெருங்கிக் கொண்டிருக்கிறது.  அங்கு 984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் தொற்று பாதித்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 571-ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;