இரண்டாம் கட்ட ஊரடங்கு நிறைவு
புதுதில்லி, மே 3- இரண்டாம் கட்ட ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை நிறை வடைந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது என்பேத உண்மை. கடந்த 24 மணிநேரத்தில் 2,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 83 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்முறையாக ஒரே நாளில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள் ளது, உயிரிழப்பும் 80-க்குமேல் அதிகரித்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 40 ஆயி ரத்து 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,306 பேர் உயிரி ழந்துள்ளனர். 10 ஆயிரத்து 887 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
ஞாயிறு மாலை ஐந்து மணி நிலவரப்படி மத்திய சுகா தாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:- மகாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை மட்டும் 700 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி மொத்தம் 12,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் சனிக்கிழமை 26 பேர் உயிரி்ழந்ததால் பலி எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளது. இங்கு 5,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் பலி எண் ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. இங்கு 2,846 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். தில்லியில் மூவர் உயிரிழந்ததால் பலியானோர் எண் ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. இங்கு 4,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் மூன்று பேர் உயிரிழந்த தால் 65 ஆகவும் அதிகரி்த்துள்ளது. இங்கு 2,772 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 5,055 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். தெலுங்கானாவில் இரண்டு பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இங்கு 1,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிர தேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிக ரித்துள்ளது, இங்கு 2,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ கத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு 2,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 155 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 25 பேர் உயி ரிழந்துள்ளனர். ஆந்திராவில் 1,583 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்குவங்கத்தில் 923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 499 பேரும் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் 400 பேர் குணமடைந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் 666 பேர், ஹரியானாவில் 360 பேர், பீகாரில் 481 பேர், அசாமில் 43 பேர், உத்தரகாண்ட்டில் 59 பேர், ஒடிசாவில் 157 பேர், சண்டிகரில் 88 பேர், சத்தீஸ்கரில் 43 பேர், லடாக்கில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் எட்டுப் பேரும், கேரளா, ஹரியானா, பீகாரில் தலா நான்கு பேரும், ஜார்க்கண்டில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந் துள்ளனர்.
ஜார்க்கண்டில் 115 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரி யில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 5 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாரு மில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசத்தில் யாரும் பாதி்க்கப்படவில்லை, மிசோரமில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.
10 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த வர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நலமடைந்து வீடு திரும்பிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஞாயிறன்று தெரிவித்தார்.