இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் , உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37,724 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191 லிருந்து 11,92,915 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 684 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084 லிருந்து 28,732 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,24,578 லிருந்து 7,53,050 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் 4,11,133 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.