தமிழகத்தில் கொரேனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
தமிழகத்தில் இன்று மாலை வரை கொரோனா பெருந்தொற்றால் 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 2.30 மணியளவில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது கணவருக்கும் கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் சீரான உடல் நிலையில் உள்ளனர். ஒருவருக்கு கூட வெண்டிலேட்டர் தேவை கூட இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.