tamilnadu

img

ஆன்லைனில் மது விற்பனை செய்ய பரிசீலியுங்கள்...

புதுதில்லி:
ஆன்லைனில் மது விற்பனை மற்றும் விநியோகம் செய்ய பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு  நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு ஜூன் 12 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்டதால் டாஸ்மாக் கடையை திறக்க தடைகோரிய வழக்கு தேவையற்றது, நாடு முழுவதும் சகஜ நிலைக்குத் திரும்பி அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுவிட்டதால், வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மதுவிற்பனை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், மதுபானத்தை எவ்வாறு விற்கமுடியும் என்பதை நீதிமன்றம் முன்வைக்க முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும்.  ஆன்லைனில் மது விற்பனை மற்றும் விநியோகம் செய்ய பரிசீலனை செய்யும்படி தமிழக அரசிடம் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்று  தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

;