புதுதில்லி:
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அந்தப் பதவியை ஏற்கத் தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்லம் ஷேர் கான், ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார். “காங்கிரஸ் கட்சிக்கு, நான் சேவையாற்ற விரும்புகிறேன். 2 ஆண்டுகளுக்கு மட்டும் தற்காலிகமாக கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளேன். 1975-இல் ஒரு ஹாக்கி வீரராக இந் திய அணி கோப்பையை வெல்ல உதவிசெய்து, என்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளேன்.எனவே, என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைக்கலாம்” என்று ஷேர் கான் கூறியுள்ளார்.