புதுதில்லி, செப்.28- காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவின் புதிய தலைவராக ரோகன் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. யான திவ்யா ஸ்பந்தனாவுக்கு பதிலாக தலைவராக ரோகன் குப்தா நியமிக்கப் பட்டு உள்ளார். இவர் இதற்கு முன் காங் கிரஸ் கட்சியின் ஊடக பிரிவின் ஒருங்கி ணைப்பாளராக பதவி வகித்தவர். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் அக்கட்சியின் சமூக ஊடக குழுவை வழி நடத்தி சென்றவர். இவரது அரசியல் பிரச்சார விளம்பர திட்டம் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத் தது. இதனால், 188 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டசபைக்கான தேர் தல் முடிவில், 20 வருடங்களுக்கு பின் பாஜகவுக்கு 99 என குறைந்த தொகுதி களே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.