tamilnadu

img

நாளை தமிழகம் வருகிறார் தோழர் ஜின்பிங்

புதுதில்லி, அக். 9- சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜீ ஜின்பிங், அக்டோபர் 11 (நாளை) தமிழகம்  வருகிறார். மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன ஜனாதிபதி ஜின்பிங் இடையிலான பேச்சுவார்த்தை 11, 12 தேதிகளில்  நடைபெறு கிறது.  இதையொட்டி சீன ஜனாதிபதியை வரவேற்க சென்னையிலும் மாமல்லபுரத்திலும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   சீன ஜனாதிபதி வருகை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை புதனன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், அக்டோபர் 11 அன்று தமிழ்நாட்டிற்கு வருகை புரிய இருப்பதாகவும், 11, 12 தேதிகளில் இருவரும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக, ஜின்பிங்-மோடி இடையிலான சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஊகான் நகரில், பிர தமர் நரேந்திர மோடி ஜின்பிங் சந்திப்பு  நடைபெற்றது. இத னைத் தொடர்ந்து, இரண்டா வது முறையாக, தமிழ்நாட் டின் மாமல்லபுரத்தில், இருநாட்டு தலை வர்களும் சந்திக்க இருப்ப தாக, வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது. பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பின்போது, இருநாடுகளுக்கிடையிலான உறவுகள், பரஸ்பர உடன்பாடுகள், பிராந்திய மற்றும் பன்னாட்டு அளவிலான விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், தமிழ்நாட்டிற்கு வருகை புரிவதாகவும், வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பினை, இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங்கும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ள்ள சீனத் தூதர், பிரதமர் மோடி-ஜனாதிபதி ஜின்பிங் இடையிலான நட்பு, அவர்களது தீர்க்கமான வழிகாட்டு தல் ஆகியவை, இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாயம் படைக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பின்போது, உடன்பாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியிருப்பதாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஜீ ஜின்பிங் குடன், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் வருவார்கள் என்றும் தகவல் வெளியாகி யுள்ளது. ஜின்பிங்குடன், பிரதமர் நரேந்திர மோடி, முதலில் தனியாக சந்தித்து பேசுவார் என்றும், பின்னர், இருநாடுகளின் உயர் அதி காரிகள் முன்னிலையில், இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.