புதுதில்லி, ஜுலை 10- செய்தித்தாள்-மாத இதழ்கள் அச்சிடப்படும் காகி தத்திற்கு 10 சதவிகிதம் இறக்குமதி வரிக்கும் மத்திய பட்ஜெட் அறிவிப்பு பத்திரி கைத்துறையை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். பல பத்திரிகைகளுக்கும் அரசின் விளம்பரம் மறுக் கப்படும் நிலையில் இப் போது இறக்குமதி வரி உயர்வுக்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சிடும் செலவில் பெரும் உயர்வுக்கு இது வழி வகுக்கும். உள்நாட்டு காகித உற்பத்தியாளர்களை பாதுகாப்பதாக கூறி இந்த உயர்வு ஞாயிறன்று (ஜுலை 7) அமலுக்கு வந்துள்ளது. மோடி இரண்டாவது முறையாக அதிகாரத்துக்கு வந்தது முதல், அரசுக்கு துதி பாடாத பத்திரிகை களுக்கு எதிரான நகர்வுகள் துவக்கப்பட்டன. தி இந்து, டெலிகிராப், அசாம் டிரிப் யூன், டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு தற்போது மத்திய அரசு விளம்பரம் தருவதில்லை. ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து தி இந்துவை கறுப்புப் பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. மோடி எதிர்ப்பு நிலையை மேற்கொ ண்டுள்ளதாக டெலிகிராப் மீது குற்றம்சாட்டப்படுகிறது. மக்களவைத் தேர்தல் பிரச்சார காலத்தில் மோடி நடத்திய பிரச்சாரங்களில் விதி மீறல்களை சுட்டிக் காட்டியதே டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு எதிரான நகர்வுக்கு காரணம். வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் விவாதத்துக்கு வழிவகுத்த குடியுரிமை திருத்த சட்டத் துக்கு எதிரான செய்தி வெளியிட்டதே அசாம் டிரிப்யூனல் செய்த குற்றம். ஆங்கில, இந்தி செய்தி மற்றும் காட்சி ஊடகங்களில் பெரும்பகுதியும் தொடர்ந்து மோடி துதி பாடுகையில் தினசரிகளில் பெரும் பாலானவை அதற்கு தயாரா காதது பாஜக தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியே பத்திரி கைத் தொழிலுக்கு எதிரான நிரந்தர நடவடிக்கைகள். அரசு டெண்டர் விளம்பரங் கள் கட்டாயமாக பத்திரிகை களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்பதில் முதலா வது மோடி அரசு மாற்றம் கொண்டு வந்தது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள டெண்டர்கள் அரசின் இ-மார்க்கெட் போர்ட்டலான மத்திய பொது கொள்முதல் போர்ட்டலில் அல்லது அமைச் சரகம் மற்றும் துறைகளின் இணைய தளங்களில் வெளி யிட்டால் போதும் என்பதே புதிய முடிவு. தற்போது அச்சுக் காகி தத்துக்கு 10 சதவிகிதம் இறக்குமதி வரி உயர்வதால் பத்திரிகைகளின் அச்சு செலவு கணிசமாக உயரும். கடந்த 2 ஆண்டுகளில் இறக்கு மதி காகித விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. 2016-18 கால அளவில் இறக்குமதி செய்த காகிதம் டன்னுக்கு ரூ.13 ஆயிரம் வரை விலை உயர்ந்தது. 2018ல் ரூ.45 ஆயிரமாக உயர்ந்தது. தற் போது ரூ.37,700க்கு விற்கப் படுகிறது. 10 சதவிகிதம் இற க்குமதி வரி அதிகமாகும் போது டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை விலை உய ரும். 2018ல் பத்திரிகை காகித உற்பத்தியை சீனா முழுமையாக நிறுத்திய உடன் சந்தையில் விலை உயர்ந்தது. சீனாவும் பத்தி ரிகை காகிதம் இறக்குமதி செய்யத் தொடங்கியது விலையில் பிரதிபலித்தது. இறக்குமதி வரி உயர்த்தப் பட்டதை இந்திய நியூஸ் பிரிண்ட் தயாரிப்பாளர் சங் கம் வரவேற்றுள்ளது. ஆனால் கூடுதல் வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்திய பத்திரிகைகள் சங்கம் கூறியுள்ளது.