tamilnadu

img

ஆக.8-ல் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டம்

புதுதில்லி:
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனித வள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய கல்விக் கொள்கையின் வரைவை வெளியிட்டது. ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே முதலில் இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது. 
பின்னர் அதன் சுருக்கப் பட்ட வடிவம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு ள்ளது.இந்த வரைவு கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், கல்விக்யாளர்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கருத்துத் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31-ம்தேதியுடன் முடிவடைய இருந்தது. பல்வேறு தரப்பின ரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது ஆகஸ்ட்15-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவுகுறித்து மாநில முதல்வர்களுடன் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக மத்தியமனிதவளத்துறை திங்க ளன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்துஅனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வி அமைச்ச ர்களுடன்  வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர கல்வித்துறை உயர்அதிகாரிகளும் இடம்பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.