tamilnadu

img

மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியமில்லை

புதுதில்லி,ஆக.30- கொரோனா தொற்று அச்சுறுத்தலால் மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது அத்தியாவசியப் பணி கிடையாது. இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்டால் கூட, அது விளைவை ஏற்படுத்தாது. லட்சக்கணக்காக அதிகாரிகள் இந்த வேலையில் ஈடுபட்டு, வீடு வீடாகச் சென்று தகவலை சேகரிக்க வேண்டும் என்பதால், ஈடுபடுபவர்களின் உடல்நலம் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

;