tamilnadu

img

உத்தரகாண்ட் பாஜக முதல்வர் மீது சிபிஐ விசாரணை... உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீதான ஊழல் புகார்தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிஐ-க்கு மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் பாஜக பொறுப்பாளராக ராவத் இருந்த போது அந்த மாநில பசு பாதுகாப்பு திட்டத்துக்கு தலைவராக நியமனம் பெற அவருக்கு சவுகான் என்பவர் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உமேஷ் குமார், சிவபிரசாத், ஆகியோர் புகார் தெரிவித்திருந்தனர்.மேலும் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது ராவத்துக்கு சேர வேண்டிய லஞ்சபணமாக அவரது மனைவியின் சகோதரிசவிதா, ஹரேந்தர் சிங் ராவத் தம்பதியின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தொடர்பான வழக்கை ரத்து செய்ய உமேஷ் குமார் கூறியிருந்தார். அதை ஏற்று உமேஷ் மற்றும் சிவபிரசாத் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய புலனாய்வுப்பிரிவு ஏற்பாடு செய்தஊழல் தடுப்பு -கண்காணிப்பு தொடர்பானதேசிய கருத்தரங்கை  காணொலி மூலம்பிரதமர் மோடி துவக்கிவைத்துப் பேசுகை யில், ஊழல் சகாப்தத்தை பின்னுக்கு தள்ளி நாடு முன்னேறிக்கொண்டிருப்பதாகவும்  2016ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டதாகவும்  நீட்டி முழங்கி, அளந்துவிட்டார்.மோடி பேசிய மறுநாளே பாஜக முதல்வர் மீதே ஊழல் புகார் குறித்து சிபிஐவிசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. பாஜக தலைவர்களின் பேச்சும் செயலும் வேறுவேறு என்பதற்கு இது உதாரணம்என்று அரசியல் கட்சியினரும் மக்களும் கூறுகின்றனர்.