tamilnadu

img

கார் பதிவெண்ணில் ஆந்திர முதல்வரின் பெயர் எழுதியவர் மீது வழக்கு பதிவு

தெலுங்கானாவில் கார் எண்ணிற்கு பதில் முதல்வரின் பதிவெண் எழுதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் கார் ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண்ணிற்கு பதில் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி. சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்ட வெள்ளை நிற நம்பர் பிளேட் இருந்தது. அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் வாகன சோதனையில் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.  இதில், வாகனம் ஏசு ரெட்டி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.  அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் காரை ஓட்டிய நபர், சுங்க சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் போலீசார் சோதனையை தவிர்க்க வாகன பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர முதல்வரின்  பெயரை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிந்தது.  இதைதொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.