பேருந்துகள், மற்றும் கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு எந்த வித குறைந்தபட்ச கல்வித்தகுதியும் அவசியம் இல்லை என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தது எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ள திட்டமிட்டு, கல்வித் தகுதியை நீக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.