tamilnadu

எல்லை பாதுகாப்புப்படை ஆண்டு விழா

புதுதில்லி,டிச.1- இந்திய எல்லை பாது காப்புப் படையின் 55-வது ஆண்டு விழா தில்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நிகழ்ந்த போரை தொடர்ந்து, எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அந்த ஆண்டில் டிசம்பர் 1 ஆம் தேதி எல்லை பாதுகாப்பு படை பிரிவு உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை  உருவாக்கப்பட்ட 55-வது ஆண்டு விழா தில்லியில் நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் நித்யானந் ராய், எல்லை பாதுகாப்புப்படையின் இயக்குநர் விவேக் குமார் ஜோரி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுடன் சேர்ந்து மோப்ப நாய்களின் அணிவகுப்பு, குதிரைப்படை மற்றும் ஒட்டகப்படையின் அணிவகுப்புகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.