tamilnadu

img

என்எல்சி  2 வது  அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து -5 பேர் பலி

கடலூர் என்எல்சி 2வது அனல்மின் நிலையத்தின் 6வது யூனிட்டில் எதிர்பாராத விதமாக  தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த தீ விபத்தில் 5 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் தீ விபத்தில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

;