சர்ச்சை பேச்சு வெளியிட்டுள்ள பாஜக எம்எல்ஏ வின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
பாஜகவினர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெறுப்பு, வன்முறை, மதகலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிற அரசியல் கட்சியினரின் பதிவுகளை நீக்கும் பேஸ்புக் நிறுவனம் பாஜகவினரின் கருத்துக்களை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில் புதன்கிழமை, பேஸ்புக் அதிகாரிகள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராகி, இரு தரப்பிலிருந்தும் கூறப்படும் அரசியல் சார்பு குறித்த கேள்விகளை எதிர்கொண்டனர்.
இதற்கிடையில் எங்கள் கொள்கையை மீறியதற்காக நாங்கள் ராஜா சிங்கை பேஸ்புக்கிலிருந்து தடை செய்துள்ளோம்" என்று ஒரு பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.