பாட்னா:
பீகாரில் தங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொற்று நோய்க்கான தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதைக்கூடதேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கானவிஷயமாக பாஜக மாற்றியிருப்பது படுமோசமான அரசியல் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.“பாஜக வாக்குறுதியைப் பார்த்தால், தேர்தலை எதிர்கொள்ளும் பீகார் மாநிலத்தை தவிர இந்தியாவின் மற்ற மாநில மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களா? இந்திய மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசிக்கு பணம் கட்ட வேண் டுமா? இந்தியாவில் இதுவரை போலியோ, சின்னம்மை தடுப்பூசி அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளன. இதைதற்போது மத்திய அரசு மாற்றப் பார்க்கிறதா?” என்று காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளது.“கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக கூறும் பாஜக, அதற்காகும் செலவை தங்கள் கட்சியின் பணத்திலிருந்து எடுத்துத் தருமா?” என்று தேசியமாநாட்டுக் கட்சித் தலைவர், ஜம்மு - காஷ்மீர்முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். “ஒருவேளை அரசின் கஜானாவிலிருந்துதான் என்றால்... அதனை நாடு முழுமைக்கும் தானே இலவசமாக தந்தாக வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் வாக்களியுங்கள்; நான் தடுப்பூசி தருகிறேன் என்று கூறுவதற்கு பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா..?” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேட்டுள்ளார்.“மக்கள் நல அரசில், ஒரு தொற்றுநோய்க்கு தடுப்பூசி போடுவதாக உறுதியளிப்பது; தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தால், அந்த அளவிற்கு அவர்களுடைய சிந்தனை கெட்டுப் போயிருக்கிறதுஎன்றே கருத வேண்டியிருக்கிறது” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி. மனோஜ்ஜா விமர்சித்துள்ளார்.“பாஜக வெற்றிபெற்றால் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம் என்றால், பாஜக ஆளாத மாநில மக்களுக்கும், பாஜகவுக்கு வாக்களிக்காத இந்தியர்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைக் காதா?” என்று ஆம் ஆத்மி கட்சி சந்தேகம்எழுப்பியுள்ளது.
“கொரோனா தடுப்பூசியை தேர்தல் லாலிபாப் என்று கருதும் உலகின் ஒரேஅரசியல் கட்சி பாஜக-வாகத்தான் இருக் கும். கொரோனாவுடன் பாஜகவின் தீய மனநிலைக்கும் சிகிச்சை தேவை” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் சாடியுள்ளார்.“தடுப்பூசி இன்னும் வரவே இல்லை. அதற்குள் பாஜகவின் தேர்தல் கால வார்த்தை ஜாலங்களில் தடுப்பூசி இடம்பெற்று விட்டது. எல்லா மாநில மக்களையும்சமமாக பார்ப்பது மத்திய அரசின் பொறுப்புஇல்லையா? என்று சிவசேனா செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கேட்டுள்ளார்.“அரசியலுக்காக கொரோனா தொற்றைப் பயன்படுத்தும் பாஜக தற்போது மரணபயத்தையும் விற்பனை செய்கிறது” என்றுராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி சாடியுள்ளது. “கொரோனா தடுப்பூசி என்பது இந்தியாவுக்கு சொந்தமானது. பாஜக-வுக்கு சொந்தமானது அல்ல!” என்று கூறியிருக்கும் அக்கட்சி, “மரண பயத்தையும் நோய் பயத்தையும் வியாபாரம் செய்ய பாஜக முடிவு செய்துவிட்டதாகவும், ஆனால், பீகார் மக்களுக்குசுய கவுரவம் உள்ளது” என்றும் குறிப்பிட் டுள்ளது.
“பீகார் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற தேர்தல் வாக்குறுதிமூலம், இந்திய அரசு தனது கொரோனாதடுப்பு ஊசி கொள்கையை அறிவித்துள் ளது. இதன்படி யாருக்காவது இலவசமாக தடுப்பூசி வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறுகிறது என்று தேர்தல் அட்டவணையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்...” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக கூறியுள்ளார். “மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை பாஜக கூற வேண்டாம்” என்றும் அவர்கண்டித்துள்ளார்.இதனிடையே, “கொரோனா தடுப்பூசியை குறைவான விலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுக்கும். அதனைமக்களுக்கு இலவசமாக கொடுப்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும். அந்தவகையில், பீகார் மாநில பாஜக அதனைஇலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளது”என்று பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் அமித் மால்வியா விளக்கம் அளித்துள்ளார்.
இதன்மூலம் கொரோனா தடுப்பூசியை மத்திய பாஜக அரசு இலவசமாக மக்களுக்கு வழங்காது என்பதையும், அந்தச் சுமையையும் மாநில அரசுகளின் தலையில்தான் ஏற்றப்போகிறது என்பதையும் அமித் மால்வியா மறைமுகமாக கூறியிருக்கிறார்.