புதுதில்லி, ஆக.27- பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தைத் தனியாரிடம் தாரைவார்ப்பதைக் கண்டித்து, அதன் ஊழியர்கள் செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நாடு முழுதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை ஆதரவைத் தெரிவித்திருப்பதுடன், கூட்டு இயக்கங்கள் நடத்திடுமாறும் அறைகூவல் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக கூட்டு மேடையின் சார்பில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு ஒரு கடிதமும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நாட்டின் கஜானாவிற்கு ஆண்டு க்கு எட்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருமானத்தை அளித்திடும் இந்நிறு வனத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் இத்தகைய தேச விரோத நடவடிக்கையைத் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் போராடும் பிபிசிஎல் ஊழி யர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தனி யார்மயத்தை எதிர்த்தும், தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்தும் பெருமளவிலான ஒருமைப் பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கூட்டுமேடை அறைகூவல் விடுத்திருக் கிறது. (ந.நி.)