tamilnadu

img

ஜாமீன் கேட்டு ப. சிதம்பரம் மனு

புதுதில்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளு டன் கடந்த 21 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கடந்த 16 ஆம்  தேதி கைது செய்தது.  இந்நிலையில், ப. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தில்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி மனு செய்துள்ளார்.  இதனை அவசர வழக்காக விசாரிக்க வே
ண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.இந்த மனு மீதான விசாரணை வேறுநீதிமன்றம் ஒன்றில் வியா ழனன்று நடைபெறுகிறது.

;