tamilnadu

img

லடாக்கின் கிழக்குப் பகுதியில் ராணுவ தளபதி ஆய்வு

ஸ்ரீநகர், செப்.17- ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பிரதேசத்திலுள்ள கிழக்குப் பகுதியில் அண்மையில் சீன ராணுவ வீரர்களுடன் தகராறு ஏற்பட்ட இட த்துக்கு சென்று இந்திய ராணுவத்தின் வட பிராந்திய படைப்பிரிவு தளபதி ரன்பீர் சிங் ஆய்வு செய்தார். பாங்காங் நதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த சீன ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ வீரர்களை தடுத்து நிறுத்தினர்.  இதனால் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே ஒரு நாள் முழு வதும் முற்றுகை நிலவியது. இதை யடுத்து மேலதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. இந்நிலையில், லடாக்கின் கிழக்குப் பகுதிக்கு இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய படைப்பிரிவு தள பதி ரன்பீர் சிங் திங்களன்று சென்றார். பாங்காங் நதியில் படகு மூலம் பய ணித்த அவர், அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்களையும் சந்தித்து உரையாடினார். அவரிடம் அங்கிருந்த  ராணுவ அதிகாரிகள், இந்திய ராணு வத்தின் செயல்பாடு குறித்தும், தயார் நிலை குறித்தும் எடுத்துரைத்தனர்.