புதுதில்லி, அக்.19- தேசிய பாதுகாப்புப் படை யான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் நிய மிக்கப்பட்டுள்ளார். இவர் 1985 ஆம் ஆண்டு குஜராத் பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவரது நியமனத்திற்கு, பிர தமர் மோடி தலைமையிலான நிய மனங்களுக்கான மத்திய அமைச்சர வைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை என்.எஸ்.ஜி. தலைமை இயக்கு நராக அனுப் குமார்சிங் பதவி வகிப்பார் என்று மத்திய பணியாளர் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.என்.எஸ்.ஜி கடந்த 1984ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.