புதுதில்லி:
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரை அருகே உள்ள தோப்பூரில் ரூ. 1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுஅனுமதி அளித்தது. ஆனால் இந்த மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மட்டும் மே மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வி.எம்.கடோச் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெண் வீட்டின் முன்பு அநாகரிகச் செயல் புரிந்த பாஜகவின் பிரமுகரான சண்முகம் சுப்பையாவும் இதில் இடம்பெற்றுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.