“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரனுக்கு சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க் கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்த கார ணத்தால் சம்பாய் சோரன் அதி ருப்தியில் இருந்ததாகவும், வர விருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காட்ஷிலா தொகுதியில் இருந்து தனது மகனை வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனும் சம்பாய் சோரனின் கோரிக்கையை மறுத்த தால் ஜேஎம்எம் கட்சியை விட்டு விலகப்போவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியது. தொ டர்ந்து கடந்த வாரம் சம்பாய் சோரன் தனக்கு ஆதரவாக உள்ள 6 ஜேஎம்எம் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. “ஜேஎம்எம் எம்எல்ஏக்கள் யாரும் சம்பாய் சோ ரனுக்கு ஆதரவாக இல்லை; அவர் மட்டுமே தனியாகச் செல்கிறார் என ஜேஎம்எம் கட்சியின் வட்டா ரங்கள் தகவல் தெரிவித்தன. ஆனால் சம்பாய் சோரன் ஆகஸ்ட் 21 அன்று,“நான் தனியாக கட்சி தொ டங்கப் போகிறேன்” என அறி வித்தார்.
அதன்பின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சம்பாய் சோரன் செவ்வாயன்று, “எனது எதிர்கால அரசியல் நிலைப் பாடு குறித்து கடந்த 18 அன்று விளக்கி இருந்தேன். முதலில் அர சியலில் இருந்து விலகிவிட வேண் டும் என்றுதான் நினைத்தேன். அந்த முடிவை கைவிட்டு பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளேன். வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைகிறேன்” என அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் பழைய வழக்குகள் மூலம் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவை உடை த்து எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது பாஜக. இதே பாணியில் சம்பாய் சோரன் மீதுள்ள வழக்குகளை வைத்து மிரட்டி பாஜக அவரை தங்கள் பக்கம் இழுத்துள்ளது. தொ டக்கத்தில் பாஜகவில் சேர விருப் பம் இல்லாமல் தனிக்கட்சி தொ டங்கும் திட்டத்தில் இருந்த சம்பாய் சோரன் ஒரே வாரத்தில் மனம் மாறி யது ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக சம்பாய் சோரன் கூறுவ தற்கு முன்பே அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா 2 நாட்களுக்கு முன்பு,“ஆகஸ்ட் 30 அன்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைய உள்ளார்” என தெரிவித்திருந்தார். இதன்மூலம் மிரட்டலுக்கு பணிந்தே சம்பாய் சோரன் பாஜக வில் இணையவுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இனி அடுத்த வேலையாக சம்பாய் சோரன் மூலம் ஜேஎம்எம் கட்சி யை உடைத்து தேர்தலுக்கு முன் ஜார்க்கண்டில் அரசியல் குழப் பத்தை ஏற்படுத்த பாஜக திட்டம் வகுத்து வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது.