சென்னை, செப்.18- மதம், மொழி பிரச்சனைகளை எழுப்பி அமித்ஷா, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி யுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- சமீபகாலமாக இந்திய மக்க ளின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற வகையில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசி வருகிறார். இந் தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என்று பேசி இந்தி பேசாத மக்களிடையே அச்சத்தை யும், பீதியையும் ஏற்படுத்தியி ருக்கிறார். அவரது நோக்கம் நிறை வேறுகிறதோ, இல்லையோ, இந்தி பேசும் மக்களை மொழி யின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கிறார். அதேபோல, கடந்த 70 ஆண்டு அனுபவத்தில் பல கட்சி ஜன நாயகம் தோற்று விட்டது, இத னால் நாட்டுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று உண் மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்தை அமித்ஷா கூறியிருக்கி றார். இதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, ஹிட்லர், முசோ லினி பாதையில் சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வரு கிற நோக்கத்தில் அவரது பதுங்கு திட்டத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார்.
பல கட்சி ஆட்சி முறை தோற்று விட்டதாக அமித்ஷா மேலும் கூறு கிறார். இதற்கு என்ன அடிப்படை என்பதை அவர் விரிவாகக் கூற வில்லை. கடந்த 2004 முதல் 2014 வரை நடைபெற்ற பல கட்சிகள் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை மூடி மறைத்து அமித்ஷா பேசியிருக்கிறார். அன்று நடைபெற்ற பல கட்சி கள் அடங்கிய கூட்டணி ஆட்சி யில் தான் சுதந்திர இந்தியா காணாத வகையில் 2005 முதல் மூன்று ஆண்டுகள் 9 சதவீதத் திற்கு மேலாக தொடர்ந்து பொரு ளாதார வளர்ச்சி ஏற்பட்டது. அந்த சாதனை பட்டியல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்து துறைகளிலும் தோல்வி ஏற்பட்டு பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை எதிர் கொண்டிருக்கிற போது, மதம், மொழி பிரச்சனைகளை எழுப்பி, மக்களின் கவனத்தை திசைத் திருப்புகிற முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருக்கிறார். இவரது முயற்சியை முறிய டிக்கிற வகையில் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் கடுமை யான பிரச்சாரத்தின் மூலம் மக்க ளிடையே வகுப்பு வாத சக்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.