tamilnadu

img

பாஜக அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தலைநகர் தில்லியில் அகில இந்திய எதிர்ப்பு தினம் எழுச்சியுடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் உட்பட இடதுசாரக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டார்கள்.

இடதுசாரிக் கட்சிகள் சார்பில், நாடு முழுதும் அக்டோபர் 10 முதல் 16 தேதிகளில் அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் தில்லியில் ஜந்தர் மந்தரில், புதன்கிழமையன்று மோடி ஆட்சியின் கீழ் ஆழமாகி வரும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் மக்களின் துன்ப துயரங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு, வேலையின்மை, விவசாயிகள் தற்கொலைகள், விவசாய நெருக்கடி முதலானவை அதிகரித்து வருவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

பேரணியாக வந்த ஊழியர்களை காவல்துறையினர் நாடாளுமன்ற வீதியில் தடுத்து நிறுத்தியதைத்தொடர்ந்து, அங்கே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, கவிதா கிருஷ்ணன் முதலானோர் உரை நிகழ்த்தினார்கள்.