புதுதில்லி,ஜன.11- தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் தமிழ் அகதிகள் அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படு வார்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் இருக்கும் 3 ஆயிரம் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை செல்ல விரும்பிய 3 ஆயிரம் பேரை அடையாளம் கண்டுள்ளதா கவும் அடுத்த சில மாதங்களில் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.