tamilnadu

img

வெங்காயத்தை வரம்புக்கு மீறி இருப்பு வைத்தால் நடவடிக்கை.... மத்திய அரசு அறிவிப்பு

புதுதில்லி:
பதுக்கலைத் தடுப்பதற்கு வெங்காயத்தை இருப்பு வைப்பதில் வியாபாரிகளுக்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது.வரம்புக்கு மீறி இருப்பு வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வெங்காயம் அதிகமாக விளையும் ஆந்திரா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய வரத்து குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டால் வெங்காயத்தின் விலை கிலோ 100ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இந்நிலையில் வெங்காயத்துக்கான இறக்குமதி விதிமுறைகளை மத்திய அரசுதளர்த்தியது. மத்திய தொகுப்பில் இருந்த வெங்காயத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க முன்வந்தது.மேலும் வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

இதன்படி, சில்லரை வியாபாரிகள் அதிகபட்சமாக தங்களிடம் 2 டன் வரை வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 25 டன் வரை இருப்புவைக்கலாம். இந்த தகவலைமத்திய நுகர்வோர் விவகாரங்கள்துறை செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதை மீறினால் அத்தியாவசிய பொருட்கள் திருத்தசட்டத்தின் கீழ் அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். இந்த திருத்த சட்டம் கடந்த மாதம்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த துறையின் மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல்  டிவிட்டரில், அதிகரித்து வரும்வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் மோடி அரசு 3-வது கட்டமாக நடவடிக்கை எடுத்து, சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் வைத்துக் கொள்ளவும், மொத்த வியாபாரிகள் 25 டன் வைத்துக் கொள்ளவும் வரம்பு நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.