tamilnadu

img

வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுங்கள்

இந்திய - சீன எல்லைப் பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுதில்லி, ஜுன் 19- இந்திய - சீன எல்லையில் நடந்த நிகழ்வு கள் குறித்தும் அங்குள்ள நிலவரங்கள் குறித்தும் மத்திய அரசு வெளிப்படைத் தன்மை யுடன் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத் தாக்கை பாதுகாப்பதில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் பொருத்தமானதல்ல என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள் ளன. லடாக் எல்லைப் பகுதியில் உள்ள கல் வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன துருப்புக் களுக்கிடையே நடந்த கடுமையான மோத லில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 20 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இந்த மோதலில் சீனத் தரப்பில் 35 பேர் பலியாகியிருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் சீன ராணுவம் அதிகா ரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதி யில் ஏற்கெனவே நீடித்துவரும் இயல்புநிலை க்கு மாறாக அப்பள்ளத்தாக்கு பகுதி தனக்கே சொந்தம் என்ற நிலைக்கு சீனத் தரப்பு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்த நிலைபாட்டிலிருந்தே, சீனத் தரப்பு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் துருப்புக்களை குவித்ததாகவும் விமர்சனங் கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஜுன் மாத துவக்கத்திலிருந்து இருதரப்புக்கு மிடையே பேச்சுவார்த்தை நடந்த போதிலும், சம்பந்தப்பட்ட எல்லைப்பகுதியிலிருந்து படைகுவிப்பை படிப்படியாக இருதரப்பும் குறைத்து கொள்வது என ஒப்புக்கொள்ளப் பட்ட போதிலும், இருதரப்புக்கிடையே விரும்பத்தகாத முறையில் கடுமையான மோதலும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்சனை குறித்தும் அடுத்து மேற்கொள்ளவேண்டிய நட வடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஜுன் 19 வெள்ளியன்று மாலை 5 மணியளவில் காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி கள் மற்றும் மாநிலங்களவையில் 5 உறுப்பினர் களை வைத்திருக்கக் கூடிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து. ராஜா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன் னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  பிஜு ஜனதாதளம் சார்பில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சிவசேனா சார்பில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் சார்பில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப் பட்டது தொடர்பாக வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்தனர். இந்தப் பிரச்சனையை மத்திய அரசு அணுகிய விதம் தொடர்பாக விமர்சித்தனர். வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நமது ராணுவ வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று கூறினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்திய ராணுவ வீரர்கள் தங்களது தீரமிக்க துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பாரம்பரியத்தின்படி எல்லையைப் பாது காப்பதற்காக தங்களது மகத்தான இன்னு யிரை ஈந்திருக்கிறார்கள் என்றும் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.

(பிடிஐ)