tamilnadu

img

பிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு

புதுதில்லி:
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தலைநகர் தில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில்  செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து, பிரதமர்  மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு மிகச்சிறப்பாக இருந்ததாகவும் அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது  பார்வை தெளிவாக இருப்பதாகவும் பல்வேறு பிரிவுகளில் இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நினைத்து, இந்தியா பெருமிதம் கொள்வதாகவும்  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  

;