புதுதில்லி, பிப்.12- தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அடைந்த படு தோல்வியை, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் ‘பிரியாணி’ சாப் பிட்டுக் கொண்டாடியுள்ளனர். தில்லி சட்டப்பேரவைத் தேர் தலில் உத்தரப்பிரதேச சாமியார் முதல்வர் ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்தார். அப்போது, “மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ‘ஷாகீன் பாக்’கில் போராடுகிற வர்களுக்கு அரவிந்த் கெஜ்ரி வால் பிரியாணி அனுப்புகிறார்” என கூறியிருந்தார். பாஜக தொண் டர்களும் இதே பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இந்து மதத்தவரின் வாக்கு களை பாஜக-வுக்கு இழுக்க முடி யும் என்று கணக்குப் போட்டு பாஜகவினர் இவ்வாறு பிரச்சா ரம் செய்தனர். ஆனால், இந்த விவகாரத்தை அரவிந்த் கெஜ்ரி வால் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். தற்போது தேர்தல் முடிவு களில், பாஜகவுக்கு படுதோல்வி யையும், ஆம் ஆத்மிக்கு மாபெ ரும் வெற்றியையும் மக்கள் அளித்துள்ள நிலையில், ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக வினரின் ‘மூக்கை’ உடைக்கும் விதமாக, ஆம் ஆத்மி தொண்டர் கள் தில்லி முழுவதும் பிரியாணி விருந்து நடத்தியுள்ளனர். அனைத்து உணவகங்களி லும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரியாணி விற்பனை யானதாக ஹோட்டல் உரிமையா ளர்கள் தெரிவித்துள்ளனர். பிரி யாணி ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் போன்ற ஆபர்களை சில நிறுவனங்கள் வழங்கியுள்ளன.