tamilnadu

img

கொரோனாவால் ஒன்றரை மாதமாக நீடிக்கும் ஊரடங்கு.... இந்திய உற்பத்தித் துறை வளர்ச்சி ஏப்ரலில் சரிபாதியாக சரிந்தது!

புதுதில்லி:
கொரோனா தாக்கம் காரணமாக, இந்தியாவில் 40 நாட்களுக்கும் மேலாகஊரடங்கு அமலில் உள்ளதால், நாட் டில் உற்பத்தி சார்ந்த தொழிற்துறை ஏப்ரல் மாதத்தில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.இதுதொடர்பாக வெளியான மாதாந்திர உற்பத்தி குறியீட்டு அறிக்கையில் (பிஎம்ஐ) இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

பிஎம்ஐ குறியீடானது 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சிக் கான அறிகுறியாகவும், 50 புள்ளிகளுக்குக் கீழாக சரிந்தால் அது சரிவாகவும் கணக்கிடப்படும்.அந்த வகையில், மார்ச் மாதத்தில்51.8 புள்ளிகளாக இருந்த குறியீடு, கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்குஅமலுக்குப் பிறகு ஏப்ரலில் 27.4 புள்ளிகளாக சரிந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.“மார்ச் 24-க்குப் பிறகு, நாடு முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு பொருட்களுக்கான தேவையில் சரிவை ஏற்படுத்தி உள்ளது. புதியஆர்டர்கள் பதிவாகவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த அளவுக்கு முன்பதிவு ஆர்டர்கள் இல்லாத சூழல் எப்போதும் உருவானதில்லை. 

பொருட்களுக்கான தேவை குறைந்த நிலையில் உற்பத்தித் துறையினர் ஏப்ரல் மாதத்தில் பெருமளவில் ஊழியர்களைக் குறைத்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், “மார்ச் மாதத்தில் இருந்துஏப்ரல் மற்றும் மே- என நீடித்த கொரோனா வைரஸ் தொற்று பீதி முற்றிலுமாக நீங்கி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டாலும் உற்பத்தித் துறை பழைய நிலையை எட்டுவதற்கு ஓராண்டு ஆகலாம்” என்றுஉற்பத்தித் துறையினர் கணித்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.இதே காலகட்டத்தில், டாலருக்குஇணையான ரூபாயின் மதிப்பும் கடந்த15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குவீழ்ச்சி அடைந்துள்ளதும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.