மார்க்ஸ் யார்?
தத்துவஞானி,
பொருளாதார மேதை,
அரசியல் சித்தாந்த அறிஞர்,
சமூகவியல் நிபுணர்,
வரலாற்று விஞ்ஞானி,
விஞ்ஞான ஆய்வாளர்,
மொழி இயல் வல்லுநர்,
இலக்கிய விமர்சகர்,
பத்திரிகையாளர்,
பிரச்சாரகர்,
அமைப்பாளர்
அனைத்துக்கும் மேலாக
மகத்தான புரட்சிக்காரர்!
அவர்தான் மாமேதை காரல் மார்க்ஸ்!
அது மட்டுமல்ல!
புராணக் கதைகளில் கூட காணமுடியாத அளவுக்குத் தன் மனைவிக்குச் சிறந்த காதல் கணவராகவும், குழந்தைகளுக்குச் சிறந்த தந்தையாகவும், நண்பர்களுக்கு அருமையான தோழராகவும் விளங்கிய அன்பு மனிதர்தான் மார்க்ஸ்! எங்கெல்ஸ்? “நம் ஆசிரியர் எங்கெல்ஸ்...” என்கிற வகையில் மார்க்ஸே பெருமையோடு குறிப்பிட்டு உள்ளார்! (“யள நபேநடள வநயஉhநச ரள .... ” உயவையட எடிடரஅந. i .568) இதற்கு மேல் மாமேதை ஃபிரடெரிக் எங்கெல்ஸ் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? இந்த இருவரின் சிந்தனை மலர்வனத்தில் இருந்து மலர்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அழகிய, மணம் வீசும் மாலையாகத் தொடுத்து ‘ மார்க்ஸ் - எங்கெல்ஸ் மேற்கொள்கள்’ என்னும் இந்தப் புத்தகத்தில் அளித்துள்ளார் இளம் தோழர் இளங்கோ! இது கொஞ்சம் சிரமமான பணிதான்! ஏனென்றால் மார்க்சும், எங்கெல்சும் தொடாத துறையே இல்லை எனலாம். அரசியல் முதல் ஆண் - பெண் உடலுறவு வரை கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றி அவர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். சிலவற்றை மிக மிக ஆழமாகவும், விரிவாகவும், மற்றவற்றைச் சருக்கமாகவும் அவர்கள் ஆய்வு செய்து தங்களது கண்டு பிடிப்புகளையும், கருத்துகளையும் வெளியிட்டு உள்ளார்கள்.
இவற்றில் மிக முக்கியமான விஷயங்கள் சிலவற்றைப் பற்றிய அவர்களது கருத்துகளை, ஒரு நல்ல அறிமுகம் என்ற வகையில், தேர்வு செய்து அளித்துள்ளார் இளங்கோ. - இது இந்தப் புத்தகத்தின் முதல் சிறப்பு. அனைத்து மேற்கொள்களுக்கும் ஒன்றுவிடாமல் ஆதாரம் காட்டியிருக்கிறார். - இது இந்தப் புத்தகத்தின் இரண்டாவது சிறப்பு. பதினைந்து அத்தியாயங்களை கொண்ட இந்தப் புத்தகத்தில் அதிக முக்கியத்துவம் உள்ள விஷயங்களுக்கு அதிகமான மேற்கோள்களை அளித்திருக்கிறார். எடுத்துக்காட்டாக ‘அரசு: தோற்றமும், வீழ்ச்சியும்’ என்கிற விஷயம் அதிக முக்கியத்துவம் கொண்டது என்பதை லெனின் முதல் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் வரை மார்க்சிய அறிஞர்கள் அனைவரும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். - இது இந்தப் புத்தகத்தின் மூன்றாது சிறப்பு ஒவ்வொரு மேற்கோளையும் படித்த பிறகு “இது பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்” என்று இளைஞர்களிடம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மேற்கோள்கள் அளிக்கப்பட்டுள்ளன. -இது இந்தப் புத்தகத்தின் நான்காவது சிறப்பு.
இப்படியே ஐந்தாவது, ஆறாவது.... என்று சொல்லிக் கொண்டே போகலாம்! சுருக்கமாகச் சொன்னால்- இளை தலைமுறையினர் அனைவருமே படிக்க வேண்டிய அருமையான அறிமுக நூல் இது! “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாகிய” மார்க்சியம் என்னும் அறிவுச் சுரங்கத்தின் நுழைவாயில்தான் இது! நுழைவாயிலோடு நீங்கள் நின்றுவிடாதீர்கள்! சுரங்கத்துக்குள் செல்லுங்கள்! அங்கே வற்றாத செல்வமாய்க் கொட்டிக் கிடக்கும் அறிவுச் செல்வத்தை அள்ளி அள்ளி எடுத்துக்கொள்ளுங்கள்! அந்தச் செல்வத்தை நடைமுறையில் பயன்படுத்துக்கள்!
மார்க்ஸ் - எங்கெல்ஸ்
மேற்கோள்கள்
தொகுப்பு: சி.இளங்கோ
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
எண்: 5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்
சென்னை - 600 089
பக்: 160, விலை ரூ.100/-
தொலைபேசி: 9841775112