tamilnadu

img

விவிபாட் சீட்டுகளுடன் பொருந்தாத 51 வாக்குகள்

புதுதில்லி:
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களைப் பயன்படுத்துவதில் நம்பகத்தன்மை இல்லை என் றும், வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைகள் விடுத்தன. ஆனால் இதனை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. இதையடுத்து, 2019 மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை, விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன் எண்ண வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அது நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. 

எனினும், ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக் கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அதன்படி நாடுமுழுவதும் பல்வேறுவாக்குச்சாவடிகளில் பதிவான 1.25 கோடி வாக்குகள், விவிபாட்  ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்ட நிலையில், அவற்றில் வெறும் 51 வாக்குகள் மட்டுமே பொருந்தாமல் இருந்த
தாகவும், மற்ற அனைத்து வாக்குகளும் விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன்பொருந்தி இருந்ததாகவும் தேர்தல்ஆணைய வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. மேலும், “சதவிகித அடிப்படையில் பார்த்தால் வெறும் 0.0004 சதவிகிதம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே ஒப்புகைச் சீட்டு பொருந்தாமல் போயுள்ளது என்றாலும், இதற்கானகாரணத்தை கண்டறிய வேண்டும்” என தலைமை தேர்தல் ஆணையர்ஜூலை 21-ஆம் தேதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.