tamilnadu

img

ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சடலமாக மீட்பு

ஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி, 10 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் அதிகாரிகள், சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 50 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுமிக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு,
இரவு முழுவதும் மீட்புப்பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இன்று காலை 9.30 மணியளவில் சிறுமியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்ட சென்றனர். ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.