tamilnadu

img

நிசர்கா புயலுக்கு 4 பேர் பலி

மும்பை, ஜூன் 4- மகாராஷ்டிராவில் புதனன்று கரையை கடந்த நிசர்கா புயலுக்கு 4 பேர் பலியாகி யுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை நிலைகுலையச் செய்த நிசர்கா புயல் ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே புதனன்று மதியம் 1 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. மாலை 4 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. நிசர்கா புயல் காரணமாக மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.