tamilnadu

img

புதிய தொழிலாளர்களுக்கு 24 சதவீத பி.எப். தொகையை அரசே செலுத்தும்...

புதுதில்லி:
அக்டோபர் 1 ஆம் முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24 சதவீத பி.எப். தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

 இந்தியாவின் பொருளாதாரம் 3-வது காலாண்டில் வலுவாக மீண்டு வரும் என்றுஆர்பிஐ கணித்துள்ளது. 2020-21 மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குச் செல்லும். பங்குச்சந்தைகள் தொடர்ந்து சீராக உயர்ந்து வருகிறது, ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. வங்கிக் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அந்நிய நேரடிய முதலீடு அதிகரித்துள்ளது. பல்வேறு துறைகளில் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய உள்ளது. வலுவான பொருளாதார முன்னே
ற்றத்தை நோக்கி நாம் செல்கிறோம், கடந்த10-15 நாட்களில், அதற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது.ஒரு நாடு - ஒரு ரேசன் திட்டம் பெரியஅளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 28 மாநிலங்களில் இந்த திட்டம் பெரியஅளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 68.8 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். இடம்பெயர் தொழிலாளர் களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி விவசாயி களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல், ஆலை உற்பத்தி அதிகரிப்பு போன்றவை பொருளாதாரம் மீட்சி பாதையில் பயணிப்பதை காட்டுகிறது.அக்டோபர் 1 முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24 சதவீத பி.எப். தொகையை மத்திய அரசே செலுத்தும். மார்ச் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலகட்டத்தில் பணியை இழந்தவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அந்நினிய நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 3-வது காலாண்டில் இந்தியபொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பும்.  அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொகை சுமார் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது.