tamilnadu

img

கொரோனா அறிகுறியே இல்லாமல் தில்லியில் 186 பேர் பாதிப்பு

புதுதில்லி, ஏப்.19- தில்லியில் அறிகுறி இல்லாமல் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள் ளார்.  இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டுமணி நிலவரப்படி கொரோனா வைரசுக்கு 507 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக உயர் வடைந்து உள்ளது. இதுவரை 2,230 பேர் குணமடைந்தும், 12,974 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர்.

இதில் தில்லியில் 1,893 பேருக்கு பாதிப்பு உள்ளது. 42 பேர் பலியாகி உள்ளனர். 72 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலை யில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “186 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. தொற்றிருப்பது பாதிக்கப்பட்ட வர்களுக்கே தெரியாது. இது மிகவும் கவ லையளிப்பதாய் உள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, ஆனால் அது இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. பீதி அடைய வேண்டிய அவசியமில்லை” என ஆறுதல் கூறிக்கொண்டார். ஹாட்ஸ் பாட் பகுதிகளில் (தொற்று தீவிரமுள்ள பகுதிகள்) ஏப்.27-ஆம் தேதி வரை ஊர டங்கை தளர்த்துவதற்கான வாய்ப்பில்லை. ஏப்.27-ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப் பட்டு ஊரடங்கை தளர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும். தில்லியில் 76 கட்டுப் பாட்டு மண்டலங்கள் உள்ளன என்றும் கூறி னார்.

 “கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒரு நப ருடன் நான் பேசினேன். அவர், அரசு உணவு விநியோக மையத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறேன் என என்னிடம் கூறி னார். அதனால், அந்த உணவு மையத்திற்கு வரும் அனைத்து மக்களிடமும், மையத்தில் பணியாற்றும் பிறருக்கும் துரித பரி சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டு உள் ளேன்” எனவும் அவர் கூறினார். கெரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் (தில்லி-24) 55% க்கும் அதிகமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள், 50 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட வர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.