300 கோடி டாலர் ராணுவ ஒப்பந்தம்
அகமதாபாத், பிப். 24- இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், செவ்வாயன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இப்பேச்சுவார்த்தையில் 3 பில்லியன் டாலர் (300 கோடி டாலர்) மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்றும் தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு அமெரிக்கா விற்க உள்ளதாகவும், முன்னதாக திங்களன்று குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் அறிவித்தார். அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்நிகழ்ச்சியின் போது, அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ கூட்டாளி யாக இந்தியா இருக்க வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா - அமெரிக்கா இடை யிலான வர்த்தகம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்றார். டிரம்ப் தமது உரையில் பிரதமர் மோடியை இடை விடாமல் புகழ்ந்து தள்ளினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் பங்கேற்றனர் என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
வரவேற்பு
முன்னதாக டொனால்டு டிரம்ப், மனைவி மெலானியா டிரம்புடன் வந்த சிறப்பு தனி விமானம் திங்களன்று 11.37 மணிக்கு அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கி யது. டிரம்பை, பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். பின்னர் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்ட னர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகை யிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சபர்மதி ஆசிரமத்தில் காந்தியின் உருவப்படத் திற்கு கைத்தறி நூலால் ஆன மாலையை பிரதமர் மோடியும், டிரம்பும் சேர்ந்து அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து ஆசிரமத்திலுள்ள நூல் நூற்கும் ராட்டை குறித்து பிரதமர் மோடி, டிரம்ப் தம்பதியினருக்கு விளக்கி கூறினார். அவரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் ராட்டையை இயக்கு வது குறித்து எடுத்துக் கூற, மெலானியாவுடன் இணைந்து டிரம்ப் ராட்டையை இயக்கினார். இதை யடுத்து சபர்மதி ஆசிரமத்தின் முன்பு மூவரும் புகைப் படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் அங்கிருந்த விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதில் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் எனக் குறிப்பிட்டு, இந்த அருமையான பயணத்துக்கு நன்றி என கூறி கையெழுத்திட்டிருந்தார். தொடர்ந்து தீயதை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே எனும் காந்தியின் கொள்கையை வலி யுறுத்தும் குரங்கு பொம்மை குறித்து டிரம்புக்கு, பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.
பின்னர் குஜராத் பயணத்தை முடித்துக்கொண்டு, தாஜ்மகாலை பார்ப்பதற்காக ஆக்ரா வந்தார். ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த டிரம்ப் மற்றும் மெலனி யாவை உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வர வேற்றனர்.பின்னர் தாஜ்மகாலை சுற்றி பார்த்தனர். இதையடுத்து, ஆக்ராவில் இருந்து தனது பிரத்யேக விமானம் மூலம் தில்லிக்கு டிரம்ப் புறப்பட்டார். தில்லி வந்த டிரம்ப்பை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து நேராக ஐடிசி மயூரா ஹோட்டல் சென்ற டிரம்ப், இரவு அங்கு தங்கியள்ளார். செவ்வாயன்று தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.