புதுச்சேரி, அக். 29- மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு வராத அதிகாரி கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கி றார். புதுச்சேரி அரசின் அனைத்து துறைகளு டன் இணைந்து மக்கள் குரல் எனப்படும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் வில்லிய னூரை அடுத்துள்ள ஏம்பலத்தில் செவ்வாய்க் கிழமை (அக்.29) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு குறைதீர்க்கும் முகாமை துவக்கி வைத்தார். சட்டப் பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலகண்ணன், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் அரசு துறைகளின் அதிகாரி கள் கலந்து கொண்டனர். மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற முதல்வர் நாராயணசாமி பின்னர் பேசு கையில்,“நெட்டப்பாக்கத்தைத் தொடர்ந்து ஏம்பலத்தில் மக்கள் குரல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நெட்டப்பாக்கத்தில் மக்க ளிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 80 சத வீதத்திற்கும் மேல் தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார். கிராமப்புற மக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வதற்காக நகரத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வருவதில்லை. நகர மக்கள்தான் அரசு அலுவலகங்கள், அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து தங்க ளது குறைகளை கூறி வருகின்றனர். எனவே தான் கிராம மக்களைத் தேடி குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய நானும், அமைச் சர்களும் வந்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்ப வர்களுக்கு மனைப் பட்டா கொடுப்பது, கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு வீடு கட்ட அனுமதி பெறுவது போன்றவை மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் அரசு புறம் போக்கு இடங்களில் நீண்டகாலமாக வசித்து வருபவர்களுக்கு அவர்களது பெயரிலேயே மனைப்பட்டா வழங்க அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அரசு எடுக்கும் முடிவுகளுக்கு சில அதிகாரிகள் தடையாக உள்ளனர். அரசு வேகமாக செயல்பட்டால், அதிகாரிகள் ஆமை வேகத்தில் செயல்படுகின்றனர். மக்க ளுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் உரிமை அரசுக்கு உள்ளது. அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்க ளுக்கு உண்டு. தலைமைச் செயலரும், கல்வித்துறை செயலரும் என்னிடம் அனு மதி பெற்று சென்றுள்ளார். பிற செயலா ளர்கள் இம்முகாமிற்கு வந்திருக்க வேண்டும். அரசு திட்டங்களை நிறைவேற்ற முக்கிய மானவர்களான செயலாளர்கள் ஏன், எதற்கு என்று கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பி அரசுக்கு தடைபோடுகின்றனர். மக்களின் வரிப்பணத்தில்தான் சம்பளம் பெறுகின் றோம், மக்களுக்கு பணியாற்றத்தான் வந்துள் ளோம் என்று சிந்தித்து செயலர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்திற்கு 42 சதவீதம் மானியத்தை தரும் மத்திய அரசு, புதுச்சேரிக்கு 26 சத வீதம்தான் தருகின்றது. ஒருபுறம் ஆளுநர், மற்றொரு புறம் மத்திய அரசு மற்றும் அதிகாரி களை சமாளித்து திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம். இவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் புதுச்சேரி இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாறும். மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்ப டும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.