புதுச்சேரி,நவ.5- திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ தஞ்சாவூரில் திருவள்ளுவரின் சிலையை சேதப்படுத்தி, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரை உருவாக்கி இருக்கின்றனர். இதன் மூலம் தமிழர்களின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமின்றி, அவர் உருவத்தி ற்கு காவி துணியை போர்த்தி அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்” என்றார். புதுச்சேரி மாநிலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது. இதுபோன்ற நிகழ்வு கள் தமிழ் இனத்தையே தலைகுனியவைக்கும் செய லாகும். தமிழக அரசு இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உறுதுணையாக இல்லாமல் அன்றாடம் மக்கள் நலத் திட்டங்களின் கோப்புகளுக்கும் அனுமதி அளிக்காமல் தடை போட்டு வருகிறார். அவர் மாநில மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அண்மையில் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக அம்மாநில முதல்வர் தொடர்ந்த வழக்கில் முதலில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அரசின் அன்றாட நிகழ்வு களுக்கு முதல்வர், அமைச்சர்களுக்கே அதிகாரம் உண்டு, ஆளு நருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை, அமைச்சரவை முடிவே இறுதியானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்றும் கூறியுள்ளதையும் நாராயணசாமி சுட்டிக்காட்டி னார்.