tamilnadu

புதுவையில் தொற்று 800ஐ கடந்தது

புதுச்சேரி, ஜூலை 2 - புதுவையில் புதிதாக 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது. புதுவையில் 60 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 459 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  331 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 12 பேர் உயிரிழந்தனர். “மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.  வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களைப் பற்றி உண்மையான தக வலை தெரிவித்தால் மேலும் தொற்று பரவாமல் தடுக்கலாம். கொரோனா  தொற்று சம்மந்தமான புகார் தெரிவிக்க 1070 (அ) 104 என்ற எண்ணுக்கு  தகவல் தெரிவிக்கலாம்” என சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.